" alt="" aria-hidden="true" />
நாட்டில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசும் மத்தியஅமைச்சர்அனுராக் தாக்கூர்,பாஜக எம்.பி. ப்ரவேவர்மாவை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கூறி உள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
மோடி அரசின் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிக்கும் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக எம்.பி. ப்ரவேவர்மா ஆகிய இருவரின் குற்றச்செயலைத் தூண்டும் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய தன் காரணமாக துணிச்சலுடன் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் துணிச்சலை அளித்துள்ளது.
மேலும் டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சர்ச்சைக்குரிய வகையிலும் பாஜக எம்பி பேசியுள்ளார்.
இது டெல்லி சட்டமன்ற தேர்தலை சீர்குலைக்கும் செயலாகும். பாஜக எம்பி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள 3 நாள்கள் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது போதுமானது இல்லை. பாஜகவை டெல்லி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தை தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேட்டு கொள்கிறது.
மேலும் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்பி ப்ரவே வர்மா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துஉடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இதே போன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வரும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் செயலும் வன்மையாக கண்டிக்கதக்கது.
ஆர்எஸ்எஸ் கை பாவைகளாக செயல் படக்கூடிய இவ்விரு பாஜக தலைவர்களின் பேச்சு நாட்டு மக்களிடையே பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்முக தன்மை கொண்ட இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அமைதி சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டும் பாஜக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை மத்திய அமைச்சரவையில் மத்திய அரசு நீக்கி அவரை உடனடியாக கைது செய்து நாட்டில் அமைதியை நிலை நாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.