புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு பகுதி மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமிக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள உணவகத்திற்கு சென்ற விஜயபாஸ்கர், பரோட்டா சுட்டு காண்பித்து அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர் பரோட்டா சுட்டதை உடனிருந்த அதிமுகவினர் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
அதிமுகவும், திமுகவும் நூதன முறையில்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற வேண்டுமென முனைப்பு காட்டி வருகின்றன. இப்படித்தான் லோக்சபா தேர்தலின்போது நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கலில் போட்டியிட்டபோது விதம் விதமாக பிரச்சாரம் செய்து மக்களைக் கவர்ந்தார். அந்தப் பாணியை தற்போது மற்ற கட்சிகள் கையில் எடுத்துள்ளன போலும்